என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
காவேரிப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி சாவு
காவேரிப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி தொழிலாளி. இவருடைய மகள் ஷாலினி (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வழக்கம் போல காலையில் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் தண்ணிர் தொட்டி அருகே இருந்த மோட்டார் ஸ்விட்ச்யை நிறுத்துவதற்காக ஷாலினி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






