என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அரக்கோணம் தேசிய மீட்புபடையினர் விரைவு
அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அரக்கோணம் தேசிய மீட்புபடையினர் விரைந்தனர்.
நெமிலி:
அரக்கோணத்தில் இருந்து தேசிய மேடைப் படை தளத்தில் இருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது இது புயலாக மாற வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம், புயல் மற்றும் கன மழைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 130 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அதிநவீன மீட்புப் கருவிகளுடன் அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் விமானப்படை விமானம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு விரைந்தனர்.
Next Story






