என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வாலாஜா அருகே எரிந்த நிலையில் வாலிபர் பிணம்
வாலாஜா அருகே எரிந்த நிலையில் வாலிபர் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா அடுத்த விசி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல்(வயது 27). இவர் அதே பகுதியில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஞானவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞானவேல் வேலைக்கு செல்லாததால் வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் அவர் குடும்பத்தாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவ்வப்போது சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார்.
சிலநாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்புவார். இதேபோல் கடந்த 14-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று வாலாஜா ரபிக் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் நேற்று மாலை பார்த்துள்ளனர்.
சம்பவம் குறித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பது தெரியவந்தது.
மேலும் அவருடைய பைக் அருகில் இருந்தது. அந்த பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து தனக்குத்தானே ஊற்றி கொண்டு தீக்குளித்து இறந்து இருக்கலாம் என போலீசார் விசாரணையில் கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






