என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த காட்சி.
அரக்கோணத்தில் சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த வார்டு உறுப்பினர்
அரக்கோணம் அருகே சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த வார்டு உறுப்பினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் வங்கி உள்ளது.
அதன் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரத்தை பெருமூச்சி ஊராட்சி மன்ற 12-வது வார்டு உறுப்பினர் ஜாபர்ஷெரிப் அப்பணத்தை மீட்டு அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் முன்னிலையில் அரக்கோணம் டவுன் சப்&இன்ஸ்பெக்டர் முத்து விடம் ஒப்படைத்தார்.
ஜாபர்ஷெரிப்பை டி.எஸ்.பி. பொன்னாடை அணிவித்து புத்தகப் பரிசு வழங்கி பாராட்டினார்.
Next Story






