என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாரச்சந்தையை திறந்த காட்சி.
    X
    வாரச்சந்தையை திறந்த காட்சி.

    சோளிங்கரில் வாரச்சந்தை திறப்பு

    சோளிங்கர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்றம், வாரச்சந்தையை முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த கொளத்தேரி ஊராட்சியில் ஊராட்சி மன்றக் கட்டிடம், வாரச்சந்தை திறப்பு விழா மற்றும் செடி நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிபாரதி என்கின்ற சுப்பிரமணி தலைமை தாங்கினார், ஒன்றிய குழுத்தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். 

    அதனைதொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு காய்கறி வழங்கி வாரச்சந்தையை தொடங்கி வைத்தார். பின்னர் பல வகை மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 

    அப்போது சோளிங்கர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் அன்பரசி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×