என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரக்கோணம் அருகே கார் மோதி தொழிலாளி சாவு

    அரக்கோணம் அருகே கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் காலிவாரி கண்டிகையை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 28). கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது நணபர் சதீஷ்குமார் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி எஃகு நகர் அருகே சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது பின்னால் வந்த கார் இவர்கள் பைக்மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. கார் பலமாக மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்த தூக்கி வீசப்பட்டதில் வினோத்குமார் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். 

    அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×