என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிப்பேட்டையில் மயான கொள்ளை விழா
ராணிப்பேட்டை மயான கொள்ளை விழாவில் அன்னதானம், இசைக் கச்சேரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் கலெக்டர்ர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மயானக்கொள்ளை திருவிழா பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், மயானக்கொள்ளை திருவிழாவில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பாதுகாப்பு மற்றும் இதர துறைகளின் பங்களிப்பு பணியை செய்து முடிக்க வேண்டும். விழா நாளில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகரப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் நாளை மயான கொள்ளை நடக்கிறது. இந்த விழாவிற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மயானக்கொள்ளை திருவிழாவில் கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






