என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய்கள் கடித்து மான் பரிதாபமாக இறந்தது கிடக்கும் மான் படம்
நெமிலியில் நாய்கள் கடித்து மான் சாவு
நெமிலி அருகே நாய்கள் கடித்து மான் பரிதாபமாக இறந்தது.
அரக்கோணம்:
நெமிலி அடுத்த கரியாகுடல் மதுரா விஜயபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நேற்று காலை புள்ளி மான் ஒன்று வழி தவறி வந்தது இதனை கண்ட தெருவில் இருந்த நாய்கள் புள்ளிமானை துரத்தி சென்று கடித்ததில் மான் இறந்து விட்டது.
இது குறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தொ¤வித்தனர்.
அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் உடலை பிரேத பா¤சோதனை செய்து பின்னர், அங்குள்ள இடத்திலேயே புள்ளி மானை தீ வைத்து எ£¤த்தனர்.
Next Story






