என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிப்பேட்டை சிப்காட் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ராணிப்பேட்டை சிப்காட் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள மேட்டுத்தெங்கல் கிராமம் அரசமர தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்.
இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 25) இவர் திருவலம் அருகே உள்ள சேவூர் தபால் அலுவலகத்தில் ஊழியராக கடந்த 2 மாதமாக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகாததால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் ஒரு அறையில் உள்ள பேனில் தூக்குப்போட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஜெயபிரகாஷை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து பாலமுருகன் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சேவியர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






