search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெமிலியில் பைக்கில் இருந்து தவறி விழுந்து அரசு ஊழியர் சாவு

    நெமிலி அருகே தேர்தல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அரசு ஊழியர் பைக்கில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 48) இவர் மேலபுலம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆவண காப்பாளராக பணிப்புரிந்து வந்தார். 

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தமிழகத்தில் நேற்று  நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக சோளிங்கர் நகராட்சி இசையனூர் பகுதிக்கு சென்றிருந்தார்.
     
    பின்னர் தனது பணியை முடித்துவிட்டு  பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி கால்வாயில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துமனைக்கு அனுப்பு வைத்தனர். மேலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×