என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அ.தி.மு.க. மீது அவதூறு பரப்ப திட்டமிட்டு பொய் பிரசாரம்-தி.மு.க.வுக்கு அன்பழகன் கண்டனம்

    அ.தி.மு.க. மீது அவதூறு பரப்ப திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாக தி.மு.க.வுக்கு அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உப்பளத்தில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் அசம்பாவித சம்பவம் நடந்தது.  இதைப்பற்றி உண்மை நிலையை உணராமல், எம்.எல்.ஏ.க்கள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொண்டனர். 

    தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கருத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்க வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படக்கூடாது. எதிர் கட்சித்தலைவர் எதிர்கட்சி தலைவராக செயல்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்த 16 வாக்குறுதிகளில் 15 வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. 

    சட்டமன்ற அறிவிப்புகள் நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில்தான் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் எதிர்கட்சித் தலைவர் புகார் கூறுகிறார். அரசு திட்டங்களை நிறைவேற்றியது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாம். 

    உள்ளாட்சி தேர்தலை தடுத்ததே தி.மு.க.தான். கட்சியின் உயர்மட்ட வக்கீல்கள் மூலம் வழக்கு தொடர்ந்து தடுத்தனர். மீண்டும் தேர்தல் நடக்க தி.மு.க.தான் மனது வைக்க வேண்டும். தோல்விபயம் காரணமாக தி.மு.க. தேர்தலை தடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×