என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாலாஜாவில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

    வாலாஜா அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
    வாலாஜா

    வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவரது மனைவி சித்ரா (வயது 42) தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

    சித்ராவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு அதற் குண்டான மாத்திரை களை சப்பிட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சித்ரா கடந்த 5&ந்தேதி ரத்தக்கொதிப்பு சர்க்கரை நோய் மாத்திரைகள் 40 எடுத்து சாப்பிட்டு மயங்கினார். 

    உடனடியாக அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×