என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு சென்ற காட்சி.
    X
    இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு சென்ற காட்சி.

    ராணிப்பேட்டையில் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்

    ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.
    ராணிப்பேட்டை:

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கலாம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி ராணிபேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.

     மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
    மாணவ- மாணவிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பள்ளிக்கு சென்றனர். 

    மாணவர்களுக்கு கொரோனா விதிமுறைகள் பின்பற்றி சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து பள்ளி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தனர். மேலும் விடுமுறை நாட்களில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    பள்ளிகள் திறக்கப்பட்டதால் வேலூர் பஸ் நிலையங்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
    Next Story
    ×