என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஓவிய போட்டி
காவேரிப்பாக்கம் அருகே தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஓவிய போட்டி பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
காவேரிப்பாக்கம்:
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 24-ந்தேதி தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காவேரிப்பாக்கம் யூனியனுக்கு உட்பட்ட ஈராளச்சேரி கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:-
வருங்கால நாட்டின் நம்பிக்கை ஒளியான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை திறம்பட அமைத்து கொள்ள கல்வியே சிறந்த ஆயுதமாகும். எந்த சூழ்நிலை வந்தாலும் பெண்கள் பயப்படாமல் எதிர்த்து நின்று சாதிக்க வேண்டும்.
மேலும் படிக்கின்ற வயதில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. செல்போன் நமது பொன்னான நேரத்தை விழுங்கி விடும் அபாயம் மிக்கது என்று அறிவுரை வழங்கினர்.
Next Story






