என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கொசு மருந்து குடித்த 7 மாத கர்ப்பிணி சாவு
அரக்கோணம் அருகே குடும்ப பிரச்சனையில் கொசு மருந்து குடித்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கீழ் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி. இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளார். இவர் கடந்த ஜனவரி 6-ம் தேதி அன்று ஒரு மாத காலம் விடுப்பில் வீட்டிற்கு வந்துள்ளார். இவரது மனைவி மோகனா (வயது 22).
7 மாத கர்ப்பிணி. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் விரத்தி அடைந்த மோனிகா வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோனிகாவை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






