search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
    X
    ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

    ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

    வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் ஏரியில் செத்து மிதந்த மீன்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் ஊராட்சி நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. 

    அதேபோல் நெடுஞ்சாலையையொட்டி வி.சி.மோட்டூர் ஏரியும் உள்ளது.  இந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்கு அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்து மீன்கள் ஏரியில் வளர்க்கப்படுகிறது. 

    இந்த  மீன்களை வளர்த்து விற்பனையும் செய்யப்படுகிறது. ஏரியில் 20 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்  மீன்கள் மர்மமான முறையில் இறந்து ஏரியில் மிதந்தன.

    இதுகுறித்து ஏரியில் ஏலம் எடுத்து மீன் வளர்ப்பவர்களிடம் கேட்டபோது பணி காலம் என்பதால் மீன்களுக்கு போதுமான ஆக்சிஜன் இல்லாததால் மீன்கள் இறந்துள்ளது என தெரிவித்தனர்.
    Next Story
    ×