search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முககவசம் அணியாதவர்களிடம் ரூ.4.80 லட்சம் அபராதம் வசூல்

    ராணிப்பேட்டையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.4.80 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 

    அதன்படி ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராத தொகை ரூ.200 லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    நகராட்சி கமிஷனர் ஏகராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அப்துல்ரஹீம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று முத்துக்கடை பஸ் நிலையம், பஜார் வீதி, சித்தூர் சாலை, கடைகள் ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். 

    அப்போது முககவசம் அணியாமல் வந்த பொது மக்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். ராணிப்பேட்டை நகராட்சி பகுதியில் இதுவரை முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இதுவரை ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
    Next Story
    ×