என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வீட்டின் கூரையில் இருந்து தவறி விழுந்ததில் முதியவர் பலி
அரக்கோணம் அருகே வீட்டின் கூரையில் இருந்து தவறி விழுந்ததில் முதியவர் பலியானார்.
அரக்கோணம்:-
அரக்கோணம் அடுத்த பெருமுச்சி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (58). இவர் தனது வீட்டின் சிமெண்ட் ஷீட் கூரை பகுதியினை சரிசெய்து கொண்டிருந்த போது திடிரென தவறி கீழே விழுந்தார்.
இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






