என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருவாட்டு ஓடையில் அழுகிய நிலையில் முதியவர் பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.
மாயமான முதியவர் பிணமாக மீட்பு
மாயமான முதியவர் ஓடையில் இறந்து கிடந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 85). இவர் கடந்த 13&ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நாராயணசாமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மகிமைபுரம் கருவாட்டு ஓடையில் ஒருவர் தண்ணீரில், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடைப்பதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் வந்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, பிணமாக மிதந்தது மாயமான நாராயணசாமி என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் எதற்காக அங்கு வந்தார்? ஓடையில் வழுக்கி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Next Story






