என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன்
    X
    போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன்

    வார ஓய்வு எடுப்பதால் போலீசார் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கின்றனர்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வார ஓய்வு எடுப்பதால் போலீசார் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கின்றனர் என போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 போலீஸ் உட் கோட்டங்கள் உள்ளன. 

    சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் 18, அனைத்து மகளிர் போலீஸ் காவல் நிலையங்கள் 2, போக்குவரத்து போலீஸ் காவல் நிலையங்கள் 2, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 2, என மொத்தம் 24 போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஆயுதப்படையுடன் சேர்ந்து 734 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

    போலீசார் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாக தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் வரையிலான போலீசாருக்கு வாரத்தில ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது.
    தினமும் 60 முதல் 80 காவலர்கள் வார ஓய்வு செல்கின்றனர். இதனால் தங்களது உடல் நலனை பேணிக் காக்கவும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் முடிகிறது.

    இதனால் போலீசார் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் தெரிவித் துள்ளார்.
    Next Story
    ×