search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை

    ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை நடந்துள்ளது.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் செல்லும் ஆரணி சாலையில் அரசு டாஸ்மாக் உள்ளது. 

    இந்த மதுபான கடையில் தங்கராஜ் என்பவர் மேற்பார்வையாளராகவும், விற்பனையாளர் ஒருவரும் பணியாற்றி வருகின்றர்.

    வழக்கம் போல நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளருக்கும், 
    திமிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தங்கராஜ் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் 3 சி.சி.டி.வி. கேமராக்களை கொள்ளையர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

    இது சம்பந்தமாக திமிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருடு போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×