என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வெண்ணீரில் விழுந்த சிறுவன் சாவு

    ராணிப்பேட்டை அருகே வெண்ணீரில் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்து அக்ராவரம் மலைமேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நடராஜரகு. இவர் சிப்காட் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

    இவரது மனைவி துர்கா. தம்பதியின் மகன் குமரன் (வயது 3). கடந்த  25&ந்தேதி துர்கா குளிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீரை இறக்கி வைத்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் குமரன் அதில் இறங்கி விட்டான்.இதில் குமரன் உடல் முழுவதும் வெந்து காயம் ஏற்பட்டது. 

    சிறுவனை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்து வமனையில் அனுமதித்தனர். 

    அங்கு சிகிச்சை பெற்று வந்த குமரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×