என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
Byமாலை மலர்28 Nov 2021 4:10 AM GMT (Updated: 28 Nov 2021 4:10 AM GMT)
கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும்.
தாராபுரம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநர்அய்யப்பன் தலைமை வகித்தார்.
கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
மேலும் 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் இளங்கோ, சங்க நிர்வாகிகள் மேகலிங்கம், தில்லையப்பன், மணிமொழி, வெங்கிடுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X