search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா
    X
    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா

    ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அழைப்பு

    2021-2022-ம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    2021-2022-ம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இம்மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என ஆக மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    இவ்விடுதிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வரும் 30-ந் தேதி மாலை 5மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர், மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×