என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது நாளாக போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்
Byமாலை மலர்24 Nov 2021 2:09 PM GMT (Updated: 24 Nov 2021 2:09 PM GMT)
ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பணிமனை தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.
ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உடனே அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் கணபதி, செயலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வேதாரண்யம் போக்குவரத்து கிளை செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார்.
ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X