search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    12 வயது மூத்த வாலிபருடன் காதல்- தாய் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பட்டதாரி இளம்பெண் தற்கொலை

    12 வயது வித்தியாசம் உடைய வாலிபரை தாய் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் இடிகரை அருகே உள்ள ஆப்பிள் கார்டனை சேர்ந்தவர் அம்சா பிரியா. தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கவுசிகா (வயது 23). பி.எஸ்.சி. பட்டதாரி.

    இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த சரவண பிரசாத் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் கவுசிகாவின் தாய்க்கு தெரிய வரவே அவர் தனது மகளை கண்டித்தார். மேலும் உன்னை விட 12 வயது மூத்த வயதுடையவரை உனக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும். எனவே காதலை கைவிடுமாறு அறிவுறுத்தி வந்தார்.

    இதன் காரணமாக கவுசிகா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அம்சா பிரியா வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த கவுசிகா காதலரை தாய் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வேலை முடிந்ததும் அம்சா பிரியா வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். வீட்டிற்குள் மகள் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அம்சா பிரியா அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கவுசிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் 12 வயது வித்தியாசம் உடைய வாலிபரை தாய் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார். பின்னர் போலீசார் கவுசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×