search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வாடிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி மரணம்

    மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள ஓடைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் மேகா (வயது 7). இவள் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக மேகா காய்ச்சலால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை எடுத்தபோதும், காய்ச்சல் குணமாகவில்லை. இதனைத் தொடர்ந்து வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மேகா பரிதாபமாக இறந்தார்.

    மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×