search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தூத்துக்குடியில் ரே‌ஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

    தூத்துக்குடியில் ரே‌ஷன் அரிசி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி வெயிலுகந்த அம்மன் கோவில் அருகே ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது 30 மூட்டைகளில் 1 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மணக்கரை அக்ஹார தெருவை சேர்ந்த இசக்கி துரை (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரே‌ஷன் அரிசியை ஒப்படைத்தனர். இசக்கி துரையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×