என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிமங்கலம் பகுதியில் கொசு உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்
Byமாலை மலர்17 Nov 2021 7:18 AM GMT (Updated: 17 Nov 2021 7:18 AM GMT)
கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால் மக்களுக்கு நோய் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
குடிமங்கலம்:
குடிமங்கலம் வட்டாரத்தில் நடப்பாண்டு நல்ல மழை பெய்துள்ளது. தொடர் மழையால் கிராம குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நீர் நிலைகளுக்கும் வரத்து கிடைத்துள்ளது. விளைநிலங்கள் மற்றும் சாலையோரங்களில் பசுமை திரும்பியுள்ள நிலையில் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் நன்னீர் மற்றும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வழக்கமாக பருவமழை சீசனில் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் மக்களுக்கு நோய் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X