search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்வையாளர் பலி
    X
    பார்வையாளர் பலி

    புதுக்கோட்டை அருகே இன்று நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் பலி

    பொன்னமராவதி அருகே மஞ்சு விட்டின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மறுநாள் மஞ்சுவிரட்டு நடைபெறும். இதனை பார்ப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் முக்கிய பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.

    இதே போல் இந்த ஆண்டு நேற்று தீவாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், இன்று விராச்சிலையில் மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதனை பார்ப்பதற்காக 1000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

    பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாடு திடீரென பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் பரளி கிராமத்தை சேர்ந்த கருப்பையா (52) என்பவர் வயிற்றில், மாடு முட்டி கிழித்தது. குடல் சரிந்த நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கருப்பையா இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×