என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரியில் தொடர் மழை- ஊட்டி மலை ரெயில் 15-ந் தேதி வரை ரத்து
Byமாலை மலர்2 Nov 2021 4:05 AM GMT (Updated: 2 Nov 2021 4:05 AM GMT)
மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர், பர்லியார் மற்றும் மலைக்காடுகளில் தொடர் மழை பெய்தது. இதனால் கடந்த 22-ந் தேதி கல்லாறு -அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே மலை ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்தன.
இதையடுத்து அந்த பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. ஆனால் ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முடியாததால் கடந்த 23-ந் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்வதால் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. அதை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மேட்டுப்பாளையம் -ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர், பர்லியார் மற்றும் மலைக்காடுகளில் தொடர் மழை பெய்தது. இதனால் கடந்த 22-ந் தேதி கல்லாறு -அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே மலை ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்தன.
இதையடுத்து அந்த பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. ஆனால் ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முடியாததால் கடந்த 23-ந் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்வதால் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. அதை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மேட்டுப்பாளையம் -ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X