என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சிவன்மலை முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை - அதிகாரி அறிவிப்பு
சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
காங்கேயம்:
திருப்பூர் சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என கோவில் உதவி கமிஷனர் முல்லை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தாண்டு தளர்வுகளுடனான சில கட்டுப்பாடுகள் தொடர்கிறது.
வரும் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் மலை மீது நடக்கும். அரசின் வழிகாட்டுதல்படி வரும் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு விழாவில் பங்கேற்க அனுமதி உண்டு.
முக்கிய நிகழ்ச்சியான 9-ந்தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 10-ந்தேதி திருக்கல்யாணம் ஆகிய நாட்களில் பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story