search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    புதுவை விடுதலை நாள்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

    இயற்கை வளமும் ஆன்மீக பலமும் பெற்றிருக்கும் புதுவை மாநிலம் இந்திய பண்பாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணை புரியும் என்பது உண்மை என கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை, இந்திய இறையாண்மையின் கீழ் தன்னை இணைத்துக் கொண்ட மகத்தான நாள் இன்று.

    எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களாலும் மக்களின் போராட்டங்களாலும் 1954-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுவை முழுமையான விடுதலை பெற்றது. அதனை நினைவு கூறும் இந்த தருணத்தில், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவக் கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழும் இந்திய ஜனநாயகத்தை ஒரு சமூகப் பொருளாதார சமத்துவம் நிறைந்த சமுதாயமாக உருவாக்க நம்மை அர்ப்பணித்து கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.

    இயற்கை வளமும் ஆன்மீக பலமும் பெற்றிருக்கும் புதுவை மாநிலம் இந்திய பண்பாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணை புரியும் என்பது உண்மை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×