என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய மின்மாற்றியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    புதிய மின்மாற்றியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்த போது எடுத்த படம்.

    கிடாரம்கொண்டான் துணை மின் நிலையத்தில் ரூ.1½ கோடியில் புதிய மின்மாற்றி அமைப்பு

    கிடாரம் கொண்டான் துணை மின் நிலையத்தில் ரூ.1½ கோடியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.
    திருவெண்காடு:

    செம்பனார்கோவில் அருகே கிடாரம்கொண்டான் பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தின் மூலம் 15 ஊராட்சி பொதுமக்கள் மற்றும் 1,200 விவசாய மின் மோட்டார்கள் பயன்படுகின்றன. இந்த துணை மின்நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின்தடை ஏற்பட்டது. எனவே புதிய மின் மாற்றி அமைத்து தர வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் நிவேதா முருகன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கிடாரம்கொண்டான் துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ., தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் கோரிக்கை மனு அளித்தார். அதன்படி ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு நாகை கோட்ட மேற்பார்வை பொறியாளர் நக்கீரன் தலைமை தாங்கினார்.. நாகை செயற்பொறியாளர் நவநீதகிருஷ்ணன், சீர்காழி செயற்பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் வரவேற்றார்.

    இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மின்மாற்றியை இயக்கி வைத்தும், கட்டிடத்தை திறந்து வைத்தும் பேசினார்.

    விழாவில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் தம்பி ஞானவேலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சசிகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், வெண்ணிலா தென்னரசன், ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கடாரம்கொண்டான் துணை மின் நிலைய பொறியாளர் வனிதா நன்றி கூறினார்.
    Next Story
    ×