என் மலர்
செய்திகள்

புத்தூரில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் வயல் வழியாக தூக்கி செல்லும் காட்சி
இறந்தவரின் உடலை வயல் வழியாக சுமந்து செல்லும் அவலம் - சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கொள்ளிடம் அருகே, மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் அருந்ததியர் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசிப்பவர்கள் இறந்தால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இந்த மயானத்திற்கு செல்வதற்கான சாலை ஆக்கிரமிக்கப்பட்டதால் இறந்தவரின் உடலை மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்து கொண்டு வயல் வழியாக செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மயான சாலை அமைத்து தரப்படவில்லை. இந்தநிலையில் இந்த பகுதியை சேர்ந்த ராமையன் என்பவர் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றி இறந்து விட்டார்.
அவரின் உடலை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடவு வயலில் நடந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.
தொடர்ந்து இந்த நிலை நீடிக்காமல் இருக்க. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






