என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - 70 பேர் கைது
Byமாலை மலர்16 Oct 2021 2:24 PM GMT (Updated: 16 Oct 2021 2:24 PM GMT)
விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகரில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், இதுதொடர்பாக மத்திய இணைமந்திரி அஜய்மிஸ்ராவை நீக்கம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நகர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, தமிழக விவசாயசங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் விஜய முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் உருவப் படத்தை எரிக்க முயன்றனர். இதனால் உருவப்படத்தை பறிக்க முயன்ற போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து வேனில் ஏற்றி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் பழைய பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகரில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், இதுதொடர்பாக மத்திய இணைமந்திரி அஜய்மிஸ்ராவை நீக்கம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நகர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, தமிழக விவசாயசங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் விஜய முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் உருவப் படத்தை எரிக்க முயன்றனர். இதனால் உருவப்படத்தை பறிக்க முயன்ற போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கைது செய்து வேனில் ஏற்றி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் பழைய பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X