search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த 2 வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதில் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் அருகே உள்ள அகரஆதனூரைச் சேர்ந்த மதன்மோகன், அவரது தாயார் உமா மகேஸ்வரி ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தில் விவசாய கடன் பெற்று வாங்கிய டிராக்டரை, அந்த தனியார் நிறுவனமே ஜப்தி செய்து எடுத்து சென்றதை கண்டித்தும், தங்களின் பெயரில் இருந்த டிராக்டரை போலி ஆவணம் மூலம் அந்த நிறுவனம் பெயர் மாற்றிக் கொண்டதாகவும் கூறி தீக்குளிக்க முயன்றனர்.

    இதைப்போல சீர்காழியை அடுத்த கடவாசல் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன், அவருடைய மனைவி குணவதி ஆகிய இருவரும் சொத்து பிரச்சினையில் தங்களுக்கு உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரை புதுப்பட்டினம் போலீசார் பதிவு செய்ய மறுப்பதாகவும் தெரிவித்து தீக்குளிக்க முயன்றனர். இதனால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டகமலநாதன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் மதன்மோகன் அவரது தாயார் உமாமகேஸ்வரி மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல பாலசுப்ரமணியன், குணவதி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×