என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் கியாஸ் கசிவால் தீ விபத்து: கணவன்-மனைவி படுகாயம்
Byமாலை மலர்9 Oct 2021 10:58 AM GMT (Updated: 9 Oct 2021 10:58 AM GMT)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த கணவன், மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பெத்தையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 57). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாச்சியார் (45).
மாரியப்பன் நேற்று வேலை முடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் சிலிண்டர் காலியானது தெரியவந்தது. இதையடுத்து அவர் வேறு சிலிண்டர் மாற்றினார்.
இரவு கணவன்-மனைவி இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் கியாஸ் கசியும் வாடை வந்தது. இதனை உணர்ந்த நாச்சியார் கணவரை எழுப்பி இதுபற்றி கூறினார்.
பின்னர் இருவரும் சமையல் அறைக்கு வந்தனர். அங்கு கியாஸ் கசிந்து இருப்பது தெரியவந்தது. உடனே மாரியப்பன் ரெகுலேட்டரை சரி செய்தார். பின்னர் மாரியப்பன் மின் விளக்கு சுவிட்சை போட்டார். அப்போது அறையில் ஏற்கனவே கியாஸ் பரவி இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மாரியப்பன் மற்றும் நாச்சியார் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இதற்கிடையே அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயத்துடன் கிடந்த கணவன்-மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் சிவகாசி தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பெத்தையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 57). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாச்சியார் (45).
மாரியப்பன் நேற்று வேலை முடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் சிலிண்டர் காலியானது தெரியவந்தது. இதையடுத்து அவர் வேறு சிலிண்டர் மாற்றினார்.
இரவு கணவன்-மனைவி இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் கியாஸ் கசியும் வாடை வந்தது. இதனை உணர்ந்த நாச்சியார் கணவரை எழுப்பி இதுபற்றி கூறினார்.
பின்னர் இருவரும் சமையல் அறைக்கு வந்தனர். அங்கு கியாஸ் கசிந்து இருப்பது தெரியவந்தது. உடனே மாரியப்பன் ரெகுலேட்டரை சரி செய்தார். பின்னர் மாரியப்பன் மின் விளக்கு சுவிட்சை போட்டார். அப்போது அறையில் ஏற்கனவே கியாஸ் பரவி இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மாரியப்பன் மற்றும் நாச்சியார் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இதற்கிடையே அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயத்துடன் கிடந்த கணவன்-மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் சிவகாசி தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X