என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
Byமாலை மலர்8 Oct 2021 2:26 PM GMT (Updated: 8 Oct 2021 2:26 PM GMT)
மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சின்னக்கடை வீதி, கண்ணாரத்தெரு, காமராஜர் சாலை, பூக்கடை தெரு வழியாக ெரயிலடி காவேரி நகரை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாஜகான், ஜே.சி.ஐ. தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள். திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவி.அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X