என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல்மேடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Byமாலை மலர்8 Oct 2021 2:14 PM GMT (Updated: 8 Oct 2021 2:14 PM GMT)
மணல்மேடு அருகே 27 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்மேடு:
மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு பகுதியில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக இயக்கவில்லை. இந்த நிலையில் சர்க்கரை ஆலையில் பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலை வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. சங்க செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 27 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் பணப்பயன், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X