என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குப்பையை எரித்த போது துப்புரவு பெண் பணியாளர் தீயில் கருகி பலி
Byமாலை மலர்8 Oct 2021 9:49 AM GMT (Updated: 8 Oct 2021 9:49 AM GMT)
விருதுநகர் அருகே குப்பையை எரித்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து துப்புரவு பெண் பணியாளர் பரிதாபமாக பலியானார்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர் புதுக்கோட்டை பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 6-ந் தேதி மாரியம்மாள் வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை சேகரித்து பின்புறம் குவித்து தீ வைத்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் எரியவில்லை. இதையடுத்து அவர் மண்எண்ணையை ஊற்றி தீ மூட்டியதாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக மாரியம்மாளின் சேலையில் தீப்பிடித்தது.
கண் இமைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் அலறித்துடித்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X