search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெச். ராஜா
    X
    ஹெச். ராஜா

    பா.ஜனதா தலைவர் எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

    அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பா.ஜனதா தலைவர் எச். ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர் எச். ராஜா. இவர் அடிக்கடி இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களை கடுமையாக பேசி சர்ச்சையில் சிக்குகிறார். அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டிருந்தார்.

    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வீட்டு பெண்களை அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு எச். ராஜாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தொடர்ந்து சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

    இன்றுதான் பா.ஜனதா தலைமை எச். ராஜாவை தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமித்திருந்தது.
    Next Story
    ×