என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா தலைவர் எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
Byமாலை மலர்7 Oct 2021 12:19 PM GMT (Updated: 7 Oct 2021 5:13 PM GMT)
அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பா.ஜனதா தலைவர் எச். ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர் எச். ராஜா. இவர் அடிக்கடி இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களை கடுமையாக பேசி சர்ச்சையில் சிக்குகிறார். அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வீட்டு பெண்களை அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு எச். ராஜாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தொடர்ந்து சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இன்றுதான் பா.ஜனதா தலைமை எச். ராஜாவை தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமித்திருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X