search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    நள்ளிரவில் திடீர் மின்தடை: செங்கல்பட்டு நகரம் இருளில் மூழ்கியது

    செங்கல்பட்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகரத்தில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் திடீரென மின் வினியோகம் துண்டிக்கபட்டது. இதே போல் திம்மாவரம், ஆத்தூர், வில்லியம்பாக்கம் பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.

    மின்தடை காரணமாக செங்கல்பட்டு நகரம் இருளில் மூழ்கியதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மின்சப்ளை சீராகவில்லை. முறையான பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    அதிகாலை 6 மணிக்கு பின்னரே மின் சப்ளை சீரானது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    செங்கல்பட்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மின்பகிர்மான வட்டத்தில் பழுதை சரி செய்கின்றோம் என அறிவித்து விட்டு அன்று காலையில் இருந்து மாலை வரை மின்வினியோகத்தை நிறுத்தி விடுகின்றனர். அப்படி இருந்தும் லேசான காற்று அடித்தாலும், மழை பெய்தாலும் உடனே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் வெட்டால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.

    செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதை சரி செய்து முறையான மின்வினியோகம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×