search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயில் தண்டனை
    X
    ஜெயில் தண்டனை

    ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கு: அரசு அதிகாரிக்கு 9 ஆண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

    ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக அரசு அதிகாரிக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள தொழிலாளர் நல மையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பத்மநாபன். இவரிடம் கடந்த 2008-ம் ஆண்டு இந்திய தேசிய தொழிலாளர் நல சங்க பொதுச்செயலாளர் ஆனந்தி என்பவர் 91 நபர்களுக்கு நலவாரிய அட்டை பெறுவதற்காக மனு அளித்துள்ளார்.தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்குவதற்காக ரூ.1,000-த்தை லஞ்சமாக உதவி ஆய்வாளர் பத்மநாபன் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஆனந்தி புகார் அளிக்க அங்கு வந்து மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்மநாபன் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இந்த வழக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் பத்மநாபனுக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

    இதனைதொடர்ந்து பத்மநாதனுக்கு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×