search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

    மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). இவர் சித்தர்காடு காவிரி ஆற்றங்கரையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சிக்கன் பகோடா விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கலியமூர்த்தி விற்பனையை முடித்துவிட்டு, காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது கலியமூர்த்தி ஆற்றில் நிலைதடுமாறி விழுந்து மூழ்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் கலியமூர்த்தி உடல் ஒதுங்கி கிடந்துள்ளது. தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×