search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விருதுநகரில் மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

    விருதுநகரில் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் சூலக்கரை மேடுதாதம்பட்டி ரோட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன் (வயது 25). இவருக்கும், பாலவநத்தத்தைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும் திருமணமானது. தற்போது கார்த்திகா 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

    அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கார்த்திகாவை அவரது பெற்றோர் அழைத்து சென்று விட்டனர்.

    இது மணிகண்டனுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனது தந்தையிடம் சொல்லி வருத்தப்பட்டார். மேலும் வெளியூரில் இருக்கும் தனது அண்ணன் நாகராஜ் என்பவரிடமும் சொல்லி வேதனைபட்டார். அவர் தம்பியை சமாதானம் செய்தார்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூலக்கரை போலீசார் விரைந்து சென்று பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×