என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்18 Sep 2021 10:24 AM GMT (Updated: 18 Sep 2021 10:24 AM GMT)
லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 11-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமிபதிராஜீ (வயது50) இவருக்கு ரீனாதேவி என்ற மனைவியும், விஸ்வேஸ்வரன் என்ற மகன் மற்றும் அமிர்தவர்சினி என்ற மகள் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி அவர் கணவருடன் முருங்கப்பாக்கத்தில் வசித்து வருகிறார். லட்சுமிபதிராஜீயுடன் அவரது தந்தையும் வசித்து வருகிறார்.
லட்சுமிபதிராஜீ ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ரீனாதேவி தனது மகன் விஸ்வேஸ்வரனுடன் முருங்கப்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தனர். வீட்டில் லட்சுமிபதிராஜீயும், அவரது தந்தையும் இருந்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு இருவரும் சாப்பிட்டு விட்டு வீட்டின் கீழ் தளத்தில் லட்சுமிபதிராஜீயும், மாடியில் அவரது தந்தையும் தூங்க சென்றனர்.
நேற்று காலை லட்சுமிபதிராஜீயின் தந்தை கீழே இறங்கி வந்து பார்த்த போது அங்கு சமையல் அறை வராண்டாவில் லட்சுமி பதிராஜீ தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனே முருங்கப்பாக்கத்தில் தங்கியிருந்த தனது பேரன் விஸ்வேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து தந்தையை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லட்சுமிபதிராஜீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லட்சுமிராஜீ இந்த துயர முடிவை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகன் விஸ்வேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X