search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை தண்டனை
    X
    சிறை தண்டனை

    செக் மோசடி வழக்கு- அரியலூர் தனியார் கல்லூரி தாளாளருக்கு சிறை தண்டனை

    செக் மோசடி வழக்கில் அரியலூர் தனியார் கல்லூரி தாளாளருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 53). இவர் அரிமா சங்க மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். அரியலூர் அருகே கீழப்பழுவூரில் உள்ள தனியார் கல்லூரி தாளாளர் பாஸ்கர்.

    இவர் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆரம்பித்த போது, ஸ்ரீதரிடம் ரூ.5 லட்சம் கடனாகப் பெற்றிருந்தார். இதற்கு ஈடாக 5 லட்சத்திற்கு வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்திய போது பாஸ்கர் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்ப வந்து விட்டது. வழக்கறிஞர் மூலம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் வராததால் அரியலூரில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு ஸ்ரீதர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. செக் மோசடி வழக்கில் அரியலூர் தனியார் கல்லூரி தாளாளர் பாஸ்கருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி (எண் 2) செந்தில்குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
    Next Story
    ×