search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காரைக்குடி ஓட்டல்களில் சோதனை: கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

    கடந்த வாரம் ஆரணியில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட சிறுமி ஒருவர் வாந்தி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் உதவியாளர்கள் மாணிக்கம் கருப்பையா உள்ளிட்ட தனிப்படை குழுவினர் அதிரடி சோதனை செய்ததில் பெரியார் சிலை அருகே உள்ள தலப்பாக்கட்டு பிரியாணி, பாரடைஸ் பிரியாணி, நிலா ரெஸ்டாரன்ட், கிச்சன் ஆகிய ஓட்டல்களில் கெட்டுப்போன சுமார் 100 கிலோ அளவிலான மட்டன், சிக்கன், மீன் போன்றவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் கூறுகையில், காரைக்குடியில் 10 ஹோட்டல்களில் சோதனை செய்ததில் மேலே குறிப்பிட்டுள்ள ஹோட்டல்களில் மக்கள் உண்பதற்கு ஏற்ற வகையில் இல்லாத, கெட்டுப்போன, பூஞ்சை ஏற்பட்ட, அதிகளவிலான செயற்கை நிறமிகள் பயன்படுத்திய, உற்பத்தி தேதி இல்லாத பாக்கெட்டில் வரும் பதப்படுத்திய என பல்வேறு வகையிலான இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்துள்ளோம்.

    இந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் செக்ஷ 55ன் படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.மீண்டும் இந்த தவறு நிகழுமானால் அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார். இதுகுறித்து சமூக ஆர்வலர் தென்னரசு கூறுகையில், ஆரணியில் ஒரு சிறுமி இறந்ததால்தான் இப்படியான சோதனைகள் செய்யப்பட்டது.


    மேலும் அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் மட்டுமே கொடுத்துள்ளார்கள்.இதைப்போன்ற தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு பெரிய அளவிலான அபராதம் விதித்து, சீல் வைத்திருக்கவேண்டும்.அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்க வேண்டும்.வெறும் எச்சரிக்கை நோட்டீஸ் மட்டுமே வழங்கி உள்ளது வேதனை அளிக்கிறது.இதைப் போன்ற சோதனை மீண்டும் ஒரு உயிர் பலியான பின்பு செய்யாமல் அடிக்கடி அதிரடி சோதனைகளை உணவு பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.செட்டிநாட்டின் அடையாளங்களில் முக்கியமானது செட்டிநாட்டு சமையல்.அதில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறாமல் பாதுகாப்பது அதிகாரிகளின் கடமையாகும்.மேலும் தொடர்ந்த சோதனைகளில் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் உள்ள ஹோட்டல்களில் 25 கிலோ இறைச்சிகளும், காளையார்கோவிலில் உள்ள ஹோட்டல்களில் 10 கிலோ இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.


    Next Story
    ×