என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்வை புறக்கணித்து 3-வது நாளாக ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்
Byமாலை மலர்9 Sep 2021 11:31 AM GMT (Updated: 9 Sep 2021 11:31 AM GMT)
தேர்வு எழுத வந்திருந்த 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தொடக்க கல்வி பட்டய தேர்வினை ஆன்லைன் வழியாக நடத்தவும், தேர்வுக்கான மதிப்பெண் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்யவும் தமிழக அரசை வலியுறுத்தி மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக நேற்றும் தேர்வு எழுத வந்திருந்த 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான தமிழ் கற்பித்தல் தேர்வு நடந்தது. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 7 மாணவர்கள், 81 மாணவிகள் என மொத்தம் 88 பேரில், 4 ஆண்கள், 47 மாணவிகள் என மொத்தம் 51 பேர் தேர்வு எழுதினர். மற்ற 37 பேரில் பலர் தேர்வு எழுத மையத்திற்கு வரவில்லை. சிலர் தேர்வை புறக்கணித்து மையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (வியாழக்கிழமை) முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் கற்பித்தல் தேர்வு நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X